லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்) 
இந்தியா

லாலு பிரசாத், ராப்ரி தேவி மீது சிபிஐ வழக்குப்பதிவு

ரயில்வே டெண்டர் முறைகேடு தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவர் மனைவி மற்றும் மகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

DIN

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவர் மனைவி மற்றும் மகள் மீது தில்லியில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

2004-2009 ஆண்டு வரை மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே டெண்டர் வேலைவாய்ப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகளின் வீடு மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமான தில்லி, பிகாரில் உள்ள 17  இடங்களில் சிபிஐ போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையின்போது வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பலரிடமிருந்து லாலு பிரசாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத், அவரின் மனைவியும் பிகாரின் முன்னாள் முதல்வருமான  ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி ஆகியோரின் மீது தில்லியில் சிபிஐ வழக்குப்பதிந்துள்ளது.

முன்னதாக லாலு பிரசாத், பிகாா் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், கால்நடைத் தீவனங்களைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, பல்வேறு கருவூலங்களில் போலி ரசீதுகளை சமா்ப்பித்து மோசடி செய்த 5 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT