முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

பஞ்சாப்பில் 424 முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பிரமுகர்கள் 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றுள்ளது.

DIN


சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பிரமுகர்கள் 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. 

இந்த 424 பேரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். 

கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்கள் உள்பட 184 பேரின் பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கேப்டன் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பர்தாப் சிங் பஜ்வாவேரின் மனைவி ஆகியோரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன்! - தங்கம் தென்னரசு

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்!

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது! எதைச் சொல்கிறார் தங்கம் தென்னரசு?

SCROLL FOR NEXT