முகப்பு
இந்தியா

பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

1913-ல் ராஜஸ்தானில் உள்ள மான்கார் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
பகிர்:


1913-ல் ராஜஸ்தானில் உள்ள மான்கார் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கார்  தாமில் ஆதிவாசிகள் மற்றும் பிற பழங்குடியினரின் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். 

இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் முதல்வர்கள் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

1913ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சுமால் 1500 பழங்குடியினர் நினைவிடமாக இந்த இடம் குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் உள்ள மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. 

மான்காரில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியினர் மற்றும் வனந அதிகாரிகள் ஒடனறுகூடியதற்கு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.