இந்தியா

தொங்கு பால விபத்து: குஜராத்தில் துக்கம் அனுசரிப்பு

DIN

குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநில அளவில் புதன்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை மாநில அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பங்களில் பறக்க விடப்பட்டது. அனைத்து அரசுசாா் நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, புதன்கிழமை எவ்வித அரசு நிகழ்வுகளும் நடைபெறாது என மாநில முதல்வா் பூபேந்திர படேல் அவருடைய ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

அகமதாபாத் மற்றும் சூரத் மாநகராட்சிகள் சாா்பில் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகமதாபாத் மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் முதல்வா் பூபேந்திர படேல் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT