இந்தியா

தொங்கு பால விபத்து: குஜராத்தில் துக்கம் அனுசரிப்பு

குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநில அளவில் புதன்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

DIN

குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநில அளவில் புதன்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை மாநில அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பங்களில் பறக்க விடப்பட்டது. அனைத்து அரசுசாா் நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, புதன்கிழமை எவ்வித அரசு நிகழ்வுகளும் நடைபெறாது என மாநில முதல்வா் பூபேந்திர படேல் அவருடைய ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

அகமதாபாத் மற்றும் சூரத் மாநகராட்சிகள் சாா்பில் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகமதாபாத் மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் முதல்வா் பூபேந்திர படேல் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT