இந்தியா

குஜராத் தொங்கு பால விபத்து: அனைத்து உடல்களும் மீட்பு

குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DIN

மோர்பி: குஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர்.

நேற்று அனைவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை காணவில்லை என்று தகவல் கிடைத்தது. எனினும் தேடும் பணி தொடங்குவதற்குள், அது தவறான தகவல் என்று தெரிய வந்தது. இதையடுத்து, பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதன்கிழமை மாநில அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பங்களில் பறக்க விடப்பட்டது. அனைத்து அரசுசாா் நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழை!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி யு-20 உலகக் கோப்பையை வென்றது மொராக்கோ!

செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!

தீபாவளியில் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

பகல் 1 மணி வரை சென்னை, 23 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

SCROLL FOR NEXT