இந்தியா

பிகார் இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.17% வாக்குகள் பதிவு!

DIN

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி மொகாமாவில் 27.30 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கோபால்கஞ்சில் 21.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பல சாவடிகளுக்கு வெளியே பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றன. மஹத்பந்தன் அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் இடைத்தேர்தல் இதுவாகும். 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 6ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT