இந்தியா

பிகார் இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.17% வாக்குகள் பதிவு!

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி மொகாமாவில் 27.30 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கோபால்கஞ்சில் 21.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பல சாவடிகளுக்கு வெளியே பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றன. மஹத்பந்தன் அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் இடைத்தேர்தல் இதுவாகும். 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 6ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT