சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது: 9 ரயில்கள் ரத்து!
சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், 9 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 50-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சந்திரசூட்!
ரயில் தடம் புரண்டதால், இந்த வழிதடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.