இந்தியா

சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது: 9 ரயில்கள் ரத்து!

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

DIN

சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், 9 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் தடம் புரண்டதால், இந்த வழிதடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT