இந்தியா

50-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சந்திரசூட்!

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக சந்திரசூட் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

DIN

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் இவரது தந்தை ஆவார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பணிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா்கள் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 1959-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி பிறந்த டி.ஒய்.சந்திரசூட், 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை பதவி வகிப்பாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT