இந்தியா

அசர வைக்கும் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எண்ணிக்கை

DIN

நாட்டில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை வெளியிட்டார். 

அதில் வெளியாகியுள்ள தரவுகளின்படி நாட்டில் 100 வயதைக் கடந்த 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 1.08 கோடி வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள் என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக 100 வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இந்தியாவின் முதல் வாக்காளரான ஷ்யாம் சரண் நெகி மறைவிற்கு தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்திருந்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT