இந்தியா

பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக கௌரவ் திவேதி நியமனம்!

DIN


புது தில்லி: பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கௌரவ் திவேதி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். 

சத்தீஸ்கரின் 1995 -பிரிவு அதிகாரியான திவேதி, அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்துக்கு பதவியில் இருப்பார். 

முன்னதாக, கௌரவ் திவேதி MyGovIndia என்ற அரசு இணையத்தளத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 

2017 முதல் 20222 வரை சசி சேகர் வேம்படி பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 

வேம்படி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்த நிலையில்,  தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனரல் மயங்க் அகர்வாலுக்கு இந்தாண்டு ஜூன் மாதம் பிரசார் பாரதியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT