ஷ்ரத்தா கொலையாளியை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்: சஞ்சய் ரெளத்
இளம்பெண் ஷ்ரத்தாவைக் கொடூரமாகக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி வீசிய நபரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் ஷ்ரத்தாவைக் கொடூரமாகக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி வீசிய நபரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.
தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொண்ட அஃப்தாபிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத், ஷ்ரத்தாவைக் கொன்ற கொலையாளியை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். புதிய நபரை நம்பத்தொடங்கும் முன்பு பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் காதல் என்ற பெயரில் உறவாடுவார்கள். ஆனால், நாம் நமது மகள்களை இழந்துகொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இது போன்ற வழக்குகளில் சட்டம் எதையும் செய்ய முடியாது. சமூகத்திடம் இதனை விட்டுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.