முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

DIN

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. 

இதனிடையே கைவிடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாநில அரசு ஊழியா்களும் முக்கிய கோரிக்கையாக வைத்து வந்தனா். இந்த நிலையில் பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வா் பகவந்த் மான் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யமுனை பாதுகாப்பு: மாணவா்களிடம் ஆலோசனை கோரிய பாஜக தலைவா்

ரூ.3 கோடி கையாடல்: கூட்டுறவு சங்கச் செயலா் கைது

பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வம் கண்டெடுப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து மகாராஷ்டிர வேளாண் அதிகாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, பெங்களூரு அணிகள் முதலிடம்

SCROLL FOR NEXT