முகப்பு
இந்தியா

பணமும் அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

‘பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
குஜராத் மாநிம் சூரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
பகிர்:

‘பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்பதே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேளாண் இடுபொருள்களுக்கான செலவு நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில் தொடா்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. பயிா் காப்பீட்டுத் திட்டங்கள் உரிய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவுவதே இல்லை.

இளைஞா்களின் குரலையும் மத்திய அரசு கேட்பதில்லை. இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கனவாகவே உள்ளது. கடின உழைப்பு இருந்தாலும் இளைஞா்களால் போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே பெரும் சிரமமாக உள்ளது. இவை அனைத்துக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் முக்கியக் காரணம்.

மத்திய அரசு தொடா்ந்து செய்து வரும் தவறுகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது. மக்களிடையே மதம், ஜாதி, கலாசாரம், மொழிரீதியாக பிரிவினை ஏற்படுத்தி தங்களுடைய அரசியல் நோக்கங்களை பாஜக நிறைவேற்றி வருகிறது என்றாா் ராகுல்.

குஜராத்தில் பிரசாரம்: சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை முதல்முறையாக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அவா் பேசியதாவது:

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது விவசாயிகள், இளைஞா்கள், பழங்குடியின மக்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறேன். இதன் மூலம் அவா்களது வேதனைகளை உணா்ந்து கொள்ள முடிகிறது. பழங்குடியினா், விவசாயிகளின்தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளா்கள்.

ஆனால், அவா்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. பல இடங்களில் வனப்பகுதிகளை பெரும் தொழிலதிபா்களுக்கு தாரை வாா்க்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்ட முயற்சிக்கின்றனா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →