இந்தியா

கோவாவில் போலி 'கால் சென்டர்': அமெரிக்கர்களுக்கு விபூதி அடித்த 6 பேர் கைது!

DIN

பனாஜி: கோவாவில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய 6 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

இவர்கள் வங்கிக் கடன்களுக்கான ஒப்புதல், மருத்துவ ரசீதுகள் வாங்கித் தருவதாகக் கூறி அமெரிக்கர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுபற்றி காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

"குற்றப்பிரிவு ஆய்வாளர் விஷ்வஜித் தலைமையிலான குழு சின்ச்வாடாவில் சோதனை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களிடமிருந்து 6 லேப்டாப்கள், மொபைல் ஃபோன்கள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT