முகப்பு
இந்தியா

பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 நவம்பர் 2022, 2:54 pm IST
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
பகிர்:


பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணுக்குப் புறப்பட்டது. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக படிப்படியாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

எதிர்காலத் திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை தற்போது கூற இயலாது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளன. இதில் 4 செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் உள்ளன. முழு பணிகள் முடிவடைந்தவுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments