பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்
பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணுக்குப் புறப்பட்டது. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக படிப்படியாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
எதிர்காலத் திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை தற்போது கூற இயலாது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளன. இதில் 4 செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் உள்ளன. முழு பணிகள் முடிவடைந்தவுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.