மகாராஷ்டிரத்தில் மின்சார ஸ்கூட்டர் சார்ஜில் இருந்தபோது பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின்சார ஸ்கூட்டர் ஒன்று சார்ஜிங்கில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, திடீரென மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அருகில் இருந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
உயர்மின் அழுத்தம் காரணமாக ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாணிக்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மின்சார ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுஸ் சமீபத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!