இந்தியா

மகாராஷ்டிர முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது: தேவேந்திர ஃபட்னவீஸ்

DIN

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கொலை செய்யப்போவதாக மர்ம நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வர்வருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் இதுதொடர்பாக அவினாஷ்(36)  என்கிற இளைஞரை லோனெவ்லா காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

தொடர்நது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளதை மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதி செய்துள்ளார். 

மேலும் முதல்வர் ஷிண்டேவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். முதல்வரின் பாதுகாப்பு முக்கியம், எங்கள் கவனம் அதில் உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT