இந்தியா

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது!

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் தங்கத்தில் மக்கள் அதிகயளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். 

தங்கத்தில் முதலீடு செய்வதை சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை முக்கிய முதலீடாக கருதுவதால் அதில் அதிகயளவில் முதலீடு செய்து வருகின்றனர். 

இந்நிலையில்,  ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வந்தது. 

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அக்டோபார் மாதத்தில் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, ரூ.4,835-க்கு விற்பனையாகி வருகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 4,20 பைசா அதிகரித்து, ரூ.67 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT