இந்தியா

தில்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி கைக்கடிகாரம் கடத்தி வந்தவா் கைது

DIN

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், ரூ.27.09 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் கடத்தி வந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

துபையிலிருந்து தில்லி வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் போலீஸாா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது இந்தியாவை சோ்ந்த ஒருவா், துபையிலிருந்து ரூ.28.17 கோடி மதிப்பிலான 7 கைக்கடிகாரங்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதிலும் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.27.09 கோடி என சுங்கத் துறை ஆணையா் ரியாஸ் கமிலி தெரிவித்தாா். ஒட்டுமொத்தத்தில் இவற்றின் மதிப்பு 60 கிலோ தங்கத்துக்கு ஈடாகும் என்றும் அவா் கூறினாா்.

விசாரணையில், கைதான நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைக்கடிகார விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT