இந்தியா

பாகிஸ்தான் சிறையில் ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

DIN

பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீப காலமாக மீனவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 6 இந்திய கைதிகளில் 5 மீனவர்கள் பாகிஸ்தான் காவலில் உயிரிழந்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் தண்டனையை நிறைவு செய்தவர்கள்.

ஆனால் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். 

அந்த நாட்டில் உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT