இந்தியா

நேற்று எருமை, இன்று பசு: மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்

DIN

குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் மீண்டும் சேதமடைந்துள்ளது. 

காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் முன் பகுதியில் சிறிய அளவில் சேதமடைந்தது. 

இதன் காரணமாக 10 நிமிடங்கள் நின்ற ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது. முன்னதாக நேற்று எருமை மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதில் அதன் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இன்று மீண்டும் விபத்துக்குள்ளாகி உள்ளது. 

இதனிடையே நேற்றைய விபத்து தொடர்பாக கால்நடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் மோடி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT