இந்தியா

உள்துறை அமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்கள்

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.

DIN

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் 11 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் குவாஹாட்டியில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வேளையில் அசாம் மாநில காவல் துறை அதிகாரிகளால் 8 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான போதைப் பொருள்கள் திரிபுரா மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் 12000 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அருணாசலப் பிரதேசத்தில் 4000 கிலோ, மேகலாயாவில் 1600 கிலோ, மணிப்பூரில் 1900 கிலோ, மிசோரத்தில் 1500 கிலோ, நாகலாந்தில் 398 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT