பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) குஜராத் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்து வரும் நாள்களில் குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு செல்லவிருக்கிறார்.
நாளை(அக்.9) குஜராத் செல்லும் பிரதமர் மோடி, ரூ.14,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கவுள்ள இந்தியாவின் முதல் கிராமம் மாதேரா என்ற அறிவிப்பை வெளியிட்டு தொடங்கிவைக்கிறார்.
அக்.11 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் சென்று மாதேஸ்வரி கோவிலில் வழிபாடு செய்கிறார்.
பிரதமர் மோடியின் பயணத்தையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.