(கோப்புப்படம்) 
இந்தியா

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல்: 6 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ரூ.350 மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் பாகிஸ்தானில் பெரிய கடத்தல் வியாபாரி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக குஜராத் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இந்தியக் கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து நடத்திய சோதனையில், சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சாகர் என்ற பாகிஸ்தான் கப்பலில் ரூ.350 கோடி மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் ஏ.டி.எஸ்., தகவலைப் பெற்று, நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ததுள்ளது.  6 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டுள்ளனர் என்று குஜராத் டிஜிபி கூறினார்.

முன்னதாக, கடந்த செப்.14ல் பாகிஸ்தான் படகு ஒன்றில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT