ஜார்க்கண்டில் செல்ஃபி எடுக்கும்போது நேர்ந்த விபரீதம்: ஒருவர் பலி!
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் ரயில் பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் ரயில் பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லதேஹர் மாவட்டத்தில் ரயில்வே பாலத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நண்பர்களான நசீர் அன்சாரி, ஃபிர்தௌஸ் அன்சாரி மற்றும் ரிஸ்வான் அன்சாரி ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை காலா நதி ரயில் பாலத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது சரக்கு ரயில் மூவர் மீதும் மோதியது. நசீர் பாலத்தின் கீழ் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரும் அருகில் உள்ள லதேஹரின் சர்தார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.