மும்பை: மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் 2008 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள் இன்னும் சில நாள்களில் வரவுள்ள நிலையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜூகுவில் உள்ள பி.விஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஹோட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காவல்துறைக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது.
இதையும் படிக்க | உலக எதிா்பாா்ப்புகளை இந்தியா பூா்த்தி செய்யும்: பிரதமா் மோடி
மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.