இந்தியா

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

DIN

மும்பை:  மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மும்பையில் 2008 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள் இன்னும் சில நாள்களில் வரவுள்ள நிலையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜூகுவில் உள்ள பி.விஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஹோட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காவல்துறைக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது. 

மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் பாதுகாப்பு முகமைகள்  ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT