இந்தியா

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

DIN

மும்பை:  மும்பை நகரின் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து மும்பையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மும்பையில் 2008 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள் இன்னும் சில நாள்களில் வரவுள்ள நிலையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜூகுவில் உள்ள பி.விஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஹோட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காவல்துறைக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது. 

மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் பாதுகாப்பு முகமைகள்  ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT