இந்தியா

சத் பூஜையில் விபரீதம்: சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து; 25 பேர் காயம்

DIN

ஔரங்காபாத்: பிகார் மாநிலம் ஔரங்காபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து நேரிட்டதில் காவலர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

ஷாஹ்கஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை சத் பூஜைக்காக பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயை அணைக்கும் பணியின்போது, பெண் தலைமைக் காவலர் உள்பட 5 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் 25 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT