இந்தியா

யுனெஸ்கோவுக்கு நன்றி: கொல்கத்தாவில் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

DIN

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், மேற்குவங்கத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய அந்தஸ்து கொடுத்துள்ளது. கலாசார விழாக்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்கத்தில் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை இன்று மெகா பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். 

முன்னதாக இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருப்பு உடை, கருப்பு பொருள்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT