இந்தியா

ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

PTI

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சிஆர்பிஎப்-யின் கோப்ரா, ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். 

குச்சாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள பருடா காட்டில் நடந்த நடவடிக்கையில் 2 சிபிஐ(மாவோயிஸ்ட்)  சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கோல்ஹான் பிரிவின் துணை ஆணையர் அஜய் லிண்டா தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சடலங்களை மீட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

சித்திரமே... சித்திரமே...

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

SCROLL FOR NEXT