இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க தில்லி செல்கிறாரா நிதீஷ் குமார்?

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக பிகார் முதல்வர் நிதீஷ் குமார்  வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக பிகார் முதல்வர் நிதீஷ் குமார்  வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

தனது தில்லி பயணத்தின்போது நிதீஷ் குமார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம் சார்பில் தேதிய நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முதல் முறையாக தில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் மாவட்டத்துக்கு வளா்ச்சித் திட்டங்கள் -முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 310 போ் கைது

பால் பேட்மின்டன் போட்டி: வேளாண் கல்லூரி அணியினருக்கு பாராட்டு

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT