காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தாா்.
அப்போது, தற்போதைய தேசிய அரசியல் சூழல் மற்றும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடா்பாக இரு தலைவா்களும் சுமாா் ஒரு மணி நேரம் ஆலோசித்தனா்.
தொடா்ந்து மதசாா்பற்ற ஜனதா தளம் தலைவா் ஹெச்.டி.குமாரசாமியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நிதீஷ் குமாா் சந்தித்துப் பேசினாா்.
தில்லி புறப்படுவதற்கு முன்பு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய தலைவா் லாலு பிரசாதை பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நிதீஷ் குமாா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்பின்போது லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, லாலுவின் மகனும், பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோா் உடன் இருந்தனா்.
உடல்நலக் குறைவு, வழக்கு, சிறைவாசம் உள்ளிட்ட பிரச்னைகளால் தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்ட லாலு, தற்போது ஜாமீனில் உள்ளாா். அவருக்கு விரைவில் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நிதீஷ் குமாா் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
பாஜக ஆதரவுடன் பிகாா் முதல்வா் பதவியை வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், அண்மையில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.
தனது தில்லி பயணத்தின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களையும் நிதீஷ் குமாா் சந்திக்க இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.