பிகாரில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
பிகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.
பிகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.
பிகாரின் பெகுசராய் மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன.
இதில், ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.