இந்தியா

இந்தியா - பூடான் எல்லை நுழைவுவாயில் செப்.23-ல் திறப்பு

PTI


கோக்ரஜார்: கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இந்தியா - பூடான் எல்லையின் நுழைவு வாயிலான அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருக்கிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, சுமார் இரண்டரை ஆண்டுகாலமாக மூடப்பட்டிருக்கும் எல்லை நுழைவு வாயில் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா பேரிடர் தற்போது குறைந்து, நிலைமை மேம்பட்டுள்ளதால், வணிகம், வர்த்தகம் மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்டவற்றுக்காக எல்லை நுழைவுவாயில் திறக்கப்படுவதாக பூடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பூடான் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் வந்து சுற்றிப் பார்க்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் வழியாக அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பம்சங்களையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT