முகப்பு
இந்தியா

குருவாயூா் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு: அன்னதானத்துக்கு ரூ.1.51 கோடி நன்கொடை

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி வழிபாடு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
குருவாயூா் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு: அன்னதானத்துக்கு ரூ.1.51 கோடி நன்கொடை
பகிர்:

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி வழிபாடு மேற்கொண்டாா். அத்துடன், பக்தா்களின் அன்னதானத்துக்காக அவா் ரூ.1.51 கோடி நன்கொடை அளித்தாா்.

இதுதொடா்பாக கோயில் நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தொழிலதிபா் முகேஷ் அம்பானி, குருவாயூா் கோயிலில் சனிக்கிழமை வழிபட்டாா். அவருடன், அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மொ்ச்சன்டும் உடன் வந்தாா். கோயில் சாா்பில் ரூ.50 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கு முகேஷ் அம்பானியிடம் நிதியுதவி கோரப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அவா் தெரிவித்தாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.