இந்தியா

உ.பி.யில் பள்ளி ஆசிரியர், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியரும், ஒன்பதாம் வகுப்பு படித்த 17 வயது மாணவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பள்ளி முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. 

இதையடுத்து, ஆசிரியரும், மாணவியும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காணாமல் போனதாகத் தகவல் வந்தது. 

இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினர் தனது மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் குழு, மிகவும் மோசமான நிலையில் இரண்டு சடலங்களை கைப்பற்றினர். 

கைப்பற்றப்பட்ட சடலங்கள் காணாமல் போன ஆசிரியர், மாணவி என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

இருவரும் பத்து நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக உடல்களின் நிலை தெரிகிறது என்றும் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT