இந்தியா

நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

DIN

நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் செப்.22-ல் சோதனை நடத்தினா்.

பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கேரளத்தில் 22 பேரும், தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகம், அசாம், தில்லி, மகாராஷ்டிரம், தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மாநில காவல் துறையினர்  இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் தில்லியில் என்ஐஏ நடத்திய பல சோதனைகளின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 45 உறுப்பினர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT