இந்தியா

முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

DIN

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமங்களின் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஏற்கெனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையின் போரிவலி பகுதியில் உள்ள அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டருகில் 
வெடிபொருள்கள் அடங்கிய வாகனம் நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT