முகப்பு
இந்தியா

சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: மீறினால் புகாரளிக்க உத்தரவு

நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:42 AM
சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: மீறினால் புகாரளிக்க உத்தரவு
பகிர்:


நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேவைக் கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது புகாரளிக்க உத்தரவு
நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவகங்களோ தங்கும் விடுதிகளோ, வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு, சேவை பிடித்திருக்கும்பட்சத்தில், அவர்களாக விருப்பப்பட்டு கொடுப்பதே சேவைக் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாமல், தன்னிக்கையாக சேவைக் கட்டணத்தை சேர்க்கும் உணவகங்கள் அல்லது விடுதிகள் மீது வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915 என்ற எண்ணில் உணவகம் அல்லது விடுதிக்கு எதிராக புகாரளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணத்தை, வேறு எந்த பெயரிலும் உணவகங்களோ விடுதிகளோ வசூலிக்கக் கூடாது என்றும் உணவுக்கான கட்டணத்திலும் சேர்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக் கட்டணத்தை உணவகங்கள் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →