கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
கேரளத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று வடக்கு மாவட்டங்களான எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 20.5 செமீ மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளனர்.