முகப்பு
இந்தியா

ஆதார் சுற்றறிக்கை: திரும்ப பெற்றது மத்திய அரசு

ஆதார் அட்டை தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என விடுத்த சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
கோப்புப் படம்
பகிர்:

ஆதார் அட்டை தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என விடுத்த சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

மேலும், ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் போன்ற தனியார் நிறுவனங்களில் ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சுற்றறிக்கை அனுப்பியது.

ஆதார் அட்டை நகலை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, பயனாளர்கள் கடைசி 4 எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், அந்த சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.  ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.