முகப்பு
இந்தியா

சுற்றுலா மேம்பாட்டிற்காக, எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுங்கள்: மக்களுக்கு மோடி கோரிக்கை

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று

Updated On : 8 நவம்பர், 2022 at 12:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடமையில் இருக்கும் நமது தேசத்தின் துணிச்சலான வீரர்களைக் காணும் தனித்துவமான அனுபவத்தை இந்தியாவின் எல்லைகள் வழங்குகின்றன என்று மத்திய சுற்றுலா, கலாசாரம் மற்றும் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கான அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் நரேந்தி மோடி பதிலளித்துள்ளார். 

அதில், “சீமா தரிசனம், சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. எல்லைகளில் வசிப்போரின் நெகிழ்தன்மையைப் போற்றும் வாய்ப்பை அது வழங்குகிறது.

Advertisement

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளுக்கு நேரில் சென்று காணுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.