முகப்பு
இந்தியா

'கர்நாடக பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிடும்'

வரும் கர்நாடக பேரவைத் தேர்தலில் என்சிபி குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஹரி ஆர் தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
கோப்புப் படம்.
பகிர்:

வரும் கர்நாடக பேரவைத் தேர்தலில் என்சிபி குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஹரி ஆர் தெரிவித்தார். 
இதுகுறித்து மும்பையில் அவர் இன்று கூறுகையில், வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் குறைந்தது 40 இடங்களில் போட்டியிடுவோம். பாஜகவின் 4 முதல் 5 எம்எல்ஏக்கள் கட்சியில் சேர எங்களுடன் தொடர்பில் உள்ளனர். 
பெங்களூருவின் முன்னாள் மேயரும் விரைவில் எங்கள் கட்சியில் சேரலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இன்று மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 
2018 தேர்தலின் போது, ​​கர்நாடகத்தில் 14 இடங்களில் என்சிபி போட்டியிட்டது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →