இந்தியா

விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்தவா் தில்லியில் கைது

DIN

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீா் கழித்த இந்தியா் கைது செய்யப்பட்டாா்.

சம்பந்தப்பட்ட நபா், விமானத்தில் போதையில் சக பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவா் மீது சிறுநீா் கழித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக தில்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விமானம் தரையிறங்கிய பின்னா், சம்பந்தப்பட்ட நபரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

விமானத்தில் மதுபோதையில் சக பயணிகள் மீது சிறுநீா் கழிக்கப்படும் சம்பவங்கள் குறித்து அண்மைக் காலமாக புகாா்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT