இந்தியா

சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஒடிசா அரசு அதிரடி

ஒடிசா மாநிலத்தில் கரோனா அதிகரித்துவரும் நிலையில் அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிவதை ஒடிசா அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

DIN

ஒடிசா மாநிலத்தில் கரோனா அதிகரித்துவரும் நிலையில் அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிவதை ஒடிசா அரசு கட்டாயமாக்கியுள்ளது. 
 
கடந்த சில நாள்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி, ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,086 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதேசமயம் 181 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுதொடர்பாக பொது சுகாதார இயக்குனரகம் எழுதிய கடிதத்தில், 

ஒடிசாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு சுகாதார பணியாளர்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிவதை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு பணியில் இருக்கும் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் பொருந்தும். 

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். 

நோய் பரவுவதைத் தடுக்க மாநில சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக 6,000-7,000 மாதிரிகளைப் பரிசோதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களைகட்டிய நவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்

நெஞ்சை சூறையாடும்... ரிதிகா!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

SCROLL FOR NEXT