அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

கரோனா ஊரடங்கில் ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் ரூ.97 லட்சமும், வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு ரூ.3 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதனை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார். புது பங்களாவை கேஜரிவால் கட்டவில்லை என்றும், ஏற்கெனவே இருந்த பழைய பங்களாவையே புதுப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

கேஜரிவால் குடியிருந்த பழைய வீட்டை மாநகராட்சி வாழத் தகுதியற்றது என்று அறிவித்திருந்ததால், கேஜரிவால் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT