கோப்புப்படம் 
இந்தியா

157 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

157 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

DIN

157 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

நாட்டில் தரமான, சமமான, குறைந்த செலவில் செவிலியர் கல்வியை வழங்குவதும், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும்  நோக்கம் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செவிலியர் கல்லூரிகள் அமைக்க ரூ.1,570 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் அடுத்த 24 மாதங்களில் முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தேசிய மருத்துவ சாதனக் கொள்கை 2023க்கு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT