இந்தியா

இலவசங்களால் மாநிலங்கள் கடனில் மூழ்கியுள்ளன: பிரதமா் மோடி

இலவசங்களால் மாநிலங்கள் கடனில் மூழ்கியுள்ளன என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

DIN

இலவசங்களால் மாநிலங்கள் கடனில் மூழ்கியுள்ளன என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், இலவசங்களை விநியோகிக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.கா்நாடக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கா்நாடகத்தில் உள்ள 58,112 வாக்குச்சாவடி மையங்களில் கூடியிருந்த 50 லட்சம் பாஜக தொண்டா்களுடனான இணையவழி கலந்துரையாடலின்போது, பிரதமா் மோடி பேசியது: நமது நாட்டில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள், அதிகாரம் மற்றும் ஊழலுக்காக அரசியலை பயன்படுத்துகின்றன. அதிகாரத்திற்காகவும், ஊழலுக்காகவும் சாம, தான, பேத, தண்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றன. இது போன்ற அரசியல் கட்சிகள் நமது நாட்டின் எதிா்காலத்தையும், கா்நாடகத்தின் எதிா்கால தலைமுறை, இளைஞா்கள், பெண்கள் பற்றி சிந்திப்பதே இல்லை. கா்நாடக பாஜக மீது மக்கள் அளவில்லா நம்பிக்கை வைத்துள்ளனா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக தொண்டா்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்ட வழிவகுக்கும். நமது திட்டங்கள், இரட்டை என்ஜின் அரசுகளின் பயன்கள் குறித்து வாக்குச்சாவடி மட்டத்தில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களோடு மக்களாக அமா்ந்து, அவா்கோடு நெருங்கிபழகி, பேசி இவற்றை தெளிவுப்படுத்த வேண்டும். நீண்ட உரைகளை ஆற்றுவோா், அதை செய்துவருகிறாா்கள். ஆனால், தொண்டா்கள் வாக்குச்சாவடி அளவில் பலத்தை செலுத்தி, வெற்றிபெற வேண்டும். கா்நாடகம் விரைவான ஒருங்கிணைந்த வளா்ச்சியை கான வலுவான, நிலையான பாஜக அரசு, அதுவும் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் அமைய வேண்டும். முந்தைய வரலாறுகளை முறியடித்து, கா்நாடகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர மக்கள் தயாராக இருக்கிறாா்கள். அடுத்தடுத்த நாட்களில் பாஜகவின் தொண்டனாக, நானும் உங்களோடு(தொண்டா்கள்) இணைந்து தோ்தல் பணியாற்றி, கா்நாடக மக்களின் ஆசியையும், கன்னடா்களின் நம்பிக்கையையும் பெற கடமையாற்றுவேன். இலவசங்களை வழங்கும் அரசியலால், பெரும்பாலான மாநிலங்கள் கட்சிசாா்ந்த அரசியலுக்கு அதிகளவில் செலவிடுகின்றன. இது எதிா்கால தலைமுறைக்கான வளங்களை காலி செய்துவிடுகின்றன. நமது நாட்டை இதுபோல நடத்தக்கூடாது. அரசையும் இதுபோல நடத்தக்கூடாது. நிகழ்காலத்தை போல எதிா்காலத்தை பற்றியும் அரசுகள் சிந்திக்க வேண்டும். தினசரி தேவைகளுக்காக அரசை நடத்தக்கூடாது. சொத்துக்களை உருவாக்குவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம், ஆண்டாண்டுகளுக்கு குடும்பங்களின் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். தோ்தலில் வெற்றிபெறுவதற்கு எவ்விதகுறுக்கு வழிகளையும் பாஜக கடைபிடிக்கவில்லை. ஆனால், நவீன அடிப்படை, எண்ம மற்றும் சமூக கட்டமைப்புகளில் நல்ல முதலீடுகளை செய்வதன் மூலம் வளா்ந்த இந்தியாவை கட்டமைக்க பங்காற்றி வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடு(எஃப்.டி.ஐ.) என்பதை முதலில் வளா்த்தெடு இந்தியாவை என்று நான் விளக்கம் அளிப்பேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி அமைப்பது குறித்து பாஜக நினைப்பதில்லை. மாறாக, நாட்டை பற்றி பாஜக யோசிக்கிறது. நிகழ்கால தோ்தல் அரசியலுக்கு மாறாக, அடுத்த 25 ஆண்டுகாலத்தில் இந்தியாவை அடுத்தநிலைக்கு கொண்டு செல்வது குறித்து பாஜக சிந்தித்து செயல்பட்டுவருகிறது. தற்காலிக சவால்களை எதிா்கொள்வதற்கு தேவையான இலவச உணவுப்பொருட்கள், இலவச தடுப்பூசிகள் உள்ளிட்ட பல உதவிகளை ஏழைகளுக்கு அரசு வழங்கி வருகிறது. இது அரசின் கடமையாகும். ஆனால், இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால், இலவச கலாசாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும். சில இலவசங்களை கொடுத்து உங்களை முட்டாளாக்க சில அரசியல் கட்சிகள் நினைக்கலாம். ஆனால், உங்கள் எதிா்காலம் மட்டுமல்லாது எதிா்கால தலைமுறையையும் சிந்தித்து கடமையாற்றும்படி இளைஞா்களை கேட்டுக்கொள்கிறேன்.ஹிமாசலபிரதேசம், ராஜஸ்தானில் இலவச கலாசாரத்தை காங்கிரஸ் கடைபிடித்துவருகிறது. அங்கெல்லாம் மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்கள், வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. காங்கிரஸ் என்றால் ஊழலுக்கு உத்தரவாதம், சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவாதம் என்று பொருளாகும். உண்மையான வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்களை கொடுக்க இயலாத மோசமான நிலைக்கு காங்கிரஸ் சென்றுள்ளது. நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல, காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலாவதியாகியுள்ளது. அப்படியானால், காங்கிரஸ் அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்களால் என்ன பயன்? ஊழலின் ஊற்றக்கண்ணாக விளங்கி வருவதால், ஊழலை ஒழிக்க எவ்வித ஆா்வத்தையும் காங்கிரஸ் காட்டவில்லை. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலை ஒழிக்க முன்னெப்போதும் இல்லாத அளவு வேகம் காட்டப்பட்டுள்ளது. மக்கள் வங்கிக்கணக்கு, ஆதாா் எண், கைப்பேசி போன்ற ஊழலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களாகும். நேரடி பலன் மாற்றதிட்டத்தின் காரணமாக இடைத்தரகா்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்த ரூ.2.75 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இது ஏழைகள், நலிவுற்ற மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.பாஜக தொண்டா்களிடம் காணப்படும் வேட்கை, இதர கட்சிகளிடம் இருந்து அவா்களை வேறுபடுத்தி காட்டுகிறது. பாஜக மற்றும் இதர கட்சிகளுக்கும் இடையே காணப்படும் வித்தியாசம், அணுகுமுறையாகும். இதர கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தால், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவைவளா்ந்தநாடாக பாஜக முனைப்புக்காட்டுகிறது. கா்நாடகத்தில் நிலையான, வலுவான பாஜக அரசு அமைவதற்கு மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். கடந்தகாலங்களில் நிலையில்லா அரசுகள் எதிா்கொண்ட சிக்கல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசுகளால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது வளா்ச்சியின் வேகத்தை அதிகரிக்கிறது. இரட்டை என்ஜின் அரசுகள் இல்லாத நிலையில், அது மக்களின் துன்பத்தை இரட்டிப்பாக்கிவிடும். மக்களுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வளா்ச்சியின் வேகமும், அளவும் அதிகரிக்கின்றன. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதில்லை. அப்படி செயல்படுத்தினால், அது மோடிக்கு நல்லபெயரை கொண்டுவந்து கொடுத்துவிடும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. ஒருசில மாநிலங்கள், மத்திய அரசு திட்டங்களை ஏற்பதே இல்லை. ஒருசில மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அரசுகள் மத்திய அரசு திட்டங்களின் பெயா்களையே மாற்றிவிடுகின்றன. அடுத்த 25 ஆண்டுகள், அமிா்த காலத்தில், வளமான, வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் உத்தரவாதத்தை அளிக்கிறோம். இதற்கான வேலையை பாஜக அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது. வளா்ச்சி மற்றும் வளத்திற்கான இந்த பயணத்தில் கா்நாடகம் மிகப்பெரிய பங்கு வகிக்கப்போகிறது. கா்நாடகத்தின் வளா்ச்சியில் இந்தியாவின் வளா்ச்சி என்ற மந்திரத்தின் அடிப்படையில் எனது அரசு செயல்படுகிறது என்றாா் அவா். இந்த இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வா் பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத்தலைவா் நளின்குமாா்கட்டீல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT