லூதியானா அருகே ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத்திணறி பலியானார்கள்.
பஞ்சாப் மாநிலம், கியாஸ்புராவில் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆலைக்கு இன்று காலை 7.15 மணியளவில் லாரியில் எடுத்துவரப்பட்ட எரிவாயு கசிந்ததில் ஆலையில் பணிபுரிந்த 9 பேர் மூச்சுத்திணறி பலியானார்கள்.
மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தொழிற்சாலை அருகே 300 மீட்டர் சுற்றளவுக்கு வாயுக்கசிவு இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே எரிவாயு கசிவு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.