இந்தியா

அமளிக்கு எதிர்ப்பு: மக்களவைக்கு ஓம் பிர்லா வரவில்லை!

மக்களவையில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி அமளியில் ஈடுபடுவதால் 2-வது நாளாக அவைக்கு வராமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா புறக்கணித்துள்ளார்.

DIN

தில்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி அமளியில் ஈடுபடுவதால் 2-வது நாளாக அவைக்கு வராமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா புறக்கணித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய கூட்டம் தொடங்கியவுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீண்டும் அவைக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, மக்களவையில் பிரதமரை விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 11-வது நாளாக பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT