முகப்பு
இந்தியா

தில்லி சேவைகள் மசோதா: காங்கிரஸுக்கு கேஜரிவால் நன்றி!

தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார். 

Updated On : 9 ஆகஸ்ட் 2023, 12:37 pm IST
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார். 

தில்லி நிர்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தில்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

மாநிலங்களவையில் 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 102 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தில்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததற்காக கார்கே, ராகுலுக்கு "தில்லியில் உள்ள 2 கோடி மக்களின் சார்பாக" நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments